Sunday 20 March 2011

ஒரு நல்ல அரசியல்வாதிக்கு தமிழக மக்களின் சார்பில் மன்னிப்பு

ஒரு மிகச்சிறந்த தமிழ் பேச்சாளர் , ஆங்கிலத்திலும் பேசக்கூடியவர் , வெகு நாட்களாக அரசியலில் இருப்பவர். கீழ்த்தரமான அரசியல் நடந்ததில்லை.



ஆனாலும் ஜாதியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் ராமதாஸ் / திருமாவளவன் போன்றோருக்கு கிடைக்கும் மரியாதை , சினிமா கவர்ச்சியை மட்டுமே மூலதனம் வைத்து கட்சி வளர்த்த எம்.ஜி.ஆர் / கருப்பு எம்.ஜி.ஆர் போன்றோருக்கு கிடைத்த கிடைக்கும் செல்வாக்கும் இவருக்கு கிடைக்கவில்லை. விடுதலை புலிகள் ( மற்றவரை போல் அல்லாமல் வெளிப்படையான / உண்மையான ) ஆதரவு மட்டுமே இவருக்கு ஒரு பின்னடைவு.

கடந்த பல தேர்தலில் இவருக்கு ஒட்டு போடாமல் இன்று இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கும் தமிழக மக்களின் சார்பாக ஒரு மன்னிப்பு. 

மன்னித்து கொள்ளுங்கள் அய்யா , பெருந்தலைவருக்கு அடுத்தபடி உங்களுக்கு தமிழர்கள் கொடுத்த பரிசு இது. அதாவது தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டு கொள்ளும் தமிழர் வழக்கத்திற்கு இன்று நீங்கள் பலி.

2 comments:

தடம் மாறிய யாத்ரீகன் said...

உண்மைதான் நண்பரே! மக்கள் இவரை பற்றி உணரும் நாள் வரும். காலம் தான் இவருக்கு நல்ல வாய்ப்பை கொடுக்க வேண்டும்

Vasu. said...

Well said Gokul..