Friday 4 November 2011

குழி முன்னேற்ற கழகம்


இந்தியாவில்  தி.மு.க/அ.தி.மு.க மாதிரி சொகுசான கட்சிகள் வேறு எங்கயும் பார்க்க முடியாது. இதில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்கட்சிக்கு வேலையே வெக்கரதில்லை , வந்த சில மாதங்களிலேயே தனக்கு தானே குழி தோண்ட  ஆரம்பிச்சு, 4
3/4 வருஷங்கள்ல ஒரு பிரமாண்ட குழியை தோண்டிஅடுத்த தேர்தல் வந்தவுடன் அதில் கவுந்தடிச்சு தம் கட்டி படுத்துக்க வேண்டியதுதான் , பிறகு வந்த மற்றொரு முன்னேற்ற கழகம் பக்கத்தில் இந்த குழிக்கு நாலடி (அதாவது நாலு மாசம்) இடைவெளி விட்டு ஒரு பெரிய குழி தோண்ட ஆரம்பிக்கலாம். அப்போ எதிர்கட்சி முன்னேற்ற கழகம் என்ன பண்றது? ........ அஞ்சு வருஷம் நல்ல தூங்கலாம் இல்லன்னா புது குழி வெட்டறத வேடிக்கை பாக்கலாம். லைப்ரரியை மாத்த போறேன் அப்படின்னு குழியை தோண்ட ஆரம்பிச்சு இருக்காங்க .. இனிமேல் போர்க்கால அடிப்படையில் பணிகள் பூர்த்தியாகும், இதற்கென ஜெயலலிதா (சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யபடாமல் இருந்தால்) தனி குழுவை நியமித்து வெரட்டி வெரட்டி வேலை வாங்க போறாங்க. குழி எத்தனை அடி அகலம் , எத்தனை அடி நீளம் குறிப்பா எத்தனை அடி ஆழம்  அப்படின்னு தெரியலை ...இன்னும் 4 3/4 வருஷம் பொறுத்துக்குங்க மொத்தமா அளந்து பார்த்திடலாம்.
வருங்கால முதல்வர் ஸ்டாலின் வாழ்க..

1 comment:

Viji said...

wish we have a strong third front, until this happens, these two leaders would take us for granted. Hating the situation. Wanting to stop voting, but as a citizen of India duty calls too... not even seeing a distant dawn or a mirage... absolutely no hopes, Gokul.