Monday 24 March 2008

கேப்பையும் கேவுறும் -4

சினிமா
---------
தமிழகத்தின் மிக முக்கியமான மீடியாவான சினிமாவில் வட தமிழகத்தின் பங்கு என்ன?
எத்தனை டைரக்டர்கள் இங்கே இருந்து வந்து இருக்கிறார்கள்?

எத்தனை கதா நாயகர்கள் இங்கே இருந்து வந்து இருக்கிறார்கள்?
எத்தனை இசை அமைப்பாளர்கள் இங்கே இருந்து வந்து இருக்கிறார்கள்?

எத்தனை தயாரிப்பாளர்கள் இங்கே இருந்து வந்து இருக்கிறார்கள்?
எத்தனை கதை ஆசிரியர்கள் இங்கே இருந்து வந்து இருக்கிறார்கள்?

பதில்: விரல் விட்டு என்னக்கூடிய அளவிற்குதான் வந்து இருக்கிறார்கள்.

என்றேனும் ஒரு கிராமத்து கதாநாயகன் வட தமிழகத்தில் இருந்து வருகின்ற மாதிரி ஒரு காட்சியமைப்பை நீங்கள் சினிமாவில் பார்த்து இருக்கிறீர்களா?

காரணம்-இயக்குனர்கள் வட தமிழகத்தை சார்ந்தவர்கள் அல்லர்!
சில பேர் இருக்கிறார்கள், உ.தா. k.s.Ravikumar இவர் சொந்த ஊர் திருத்தணி, ஆனால் இவர் கிராமத்து கதை கோவையை சார்ந்ததாக இருக்கும் ( நாட்டாமை,நட்புக்காக!)


இதற்கு காரணம்- வட தமிழகத்தை, இவர் பிறந்த மண்னை இவர் ஒரு கிராமமாகவே பார்க்கவில்லை.

ஒரு பாரதிராஜாவால், வரண்ட பூமியை வைத்து ஒரு "கருத்தம்மா" எடுக்க முடிகிறது, ஆனால் k.s.Ravikumar-ஆல் திருத்தணியை வைத்து எந்த
கதையையும் எடுக்க முடியவில்லை.


பல வருடஙளுக்கு முன்பு வந்த மக்களை பெற்ற மகராசி சினிமா பாடல் என்னை மிகவும் யோசிக்க வைத்த பாடல்,(கவி: மருதகாசி)

"மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி"

இதில் வரும் ஊர்பெயர்கள் மிகவும் யோசிக்க வைத்தவை,

மணப்பாற மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி....ஆத்தூரு கிச்சிலி சம்பா....
...கருதை நல்ல விளயவச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
...பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே விருது நகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு...


இதில் வரும் ஊர் பெயர்கள் இவைதான். ..

நான் எதுவும் கூட்டவோ குறைக்கவோ இல்லை.

பலப்பல வருடங்களுக்கு பின்பு வந்த சாமி திரைப்பட பாடலில் (திரு நெல்வேலி அல்வாடா,திருச்சி மலை கோட்டைடா) இடம் பெற்ற ஊர்கள்

திருநெல்வேலி

திருப்பதி
பாண்டிச்சேரி
மதுரை
திண்டுக்கல்லு
பாளையங்கோட்டை
காஞ்சிபுரம் (தவறி வந்து விட்டது)
ஊத்துக்குளி
திருச்செந்தூர்
தூத்துக்குடி

ஒரு திரைப்பட பாடலை வைத்து எனது வாதங்களை வைப்பதற்கு சங்கடமாகதான் இருக்கிறது, ஆனாலும் தமிழகத்தில் திரைப்படத்தின் வீச்சு வைத்து பார்க்கையில் இந்த பாடல் வரிகள் முக்கிய இடங்களை பெறுகிறது.

ஆக அன்று முதல் இன்று வரை எதுவுமே மாறவில்லை.

இதற்கு சினிமாவை மட்டும் குற்றம் சொல்ல முடியாது, ஒரு brand value இல்லாமல் சினிமாக்காரர்கள் எதனையும் தொட மாட்டர்கள்.

பத்திரிக்கைகளிலும் சரி, திரைப்படத்திலும் சரி, விழுப்புரத்திற்கு வடக்கே உள்ள பிரதேசம் விலக்கபட்டே இருக்கிறது.

நெல்லை தமிழ், கோவை தமிழ்,ராம நாதபுரத்து தமிழ்,தஞ்சை தமிழ்,மதுரை தமிழ் என ஒவ்வோரு தமிழ் பற்றி ஆனந்த விகடனில் பத்தி பத்தியாக
வெளி வரும், ஆனால் விகடனை பொருத்தவரை விழுப்புரத்திற்கு வடக்கே ஒரே தமிழ் , அது சென்னை தமிழ்.


300 ஆண்டுகளுக்கு முன்பு உருவான சென்னையை வைத்தே சுமார் 86 தொகுதிகளை கொண்ட இந்த ஜில்லாக்களின் தமிழ், சென்னை தமிழ் என்று
அழைக்கபடுகிறது.


வட ஆற்காடு, தென் ஆற்காடு என்ற பரந்த மாவட்டங்களுக்குள் dialect வேறுபாடு இருக்கும், என்று கூட யாரும் கவலை படவில்லை.

இதுவே தென் தமிழகத்திற்கு இது போல நடந்து இரு ந்தால், ஏகப்பட்ட கண்டன குரல்கள் வ ந்து இருக்கும்.

வட பகுதி ஆட்கள் அவ்வளவு "பிசி", தங்கள் வயிற்றை கழுவிக்கொள்வதில்.


இந்த சூழ் நிலையில் , சமீப காலமாக ஒரெ ஒரு இயக்குநர், வெளிபட்டு இருக்கிறார், அவர், தங்கர் பச்சன்.

அவரும், ஒரு சாதிய கன்னோட்டதில் தம்மை சுருக்கி கொண்டாரோ என சமீப செய்திகள் அச்சப்பட வைக்கின்றன.

ஆன்டிபட்டியையும் அரசம்பட்டியையும் தெரிய வைக்க அல்லி நகரத்தில் இருந்து இயக்குநர் வந்தார்.

அதே போல் கலசபாக்கதையும், தக்கோலத்தையும் செஞ்சியையும் சொல்வதற்கு ஒரு கலைஞன் வரவேண்டும்.

சொந்த மாநிலத்திலேயே தமது கலாச்சாரத்தை, சொந்த பழக்க வழக்கங்களை சொல்ல துணிவில்லாத தாழ்வு மனப்பாண்மையை என்னவென்று
சொல்வது?

3 comments:

முரளிகண்ணன் said...

மிக அருமையான பதிவு.

Vasu. said...

Thanks Mr.Muralikannan

Guru Prasath said...

அட நானும் இத பத்தி ஒரு பதிவு போட்டிருக்கேங்க, இங்கிலிபீசுல. படிச்சு பாருங்க, ஆனா நான் தான் first

http://filmfare.blogspot.com/2005/06/filmi-village.html