Sunday 17 May 2009

தேர்தல் 2009 - ஒரு எதிர்வினை

கோகுல்,

முதலில் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன் கருத்தை முழுமையாக ஆமோதிக்கிறேன். இருந்தாலும், இதில் பணபலம் பெரும் தொண்டாற்றியது என்பது மறுக்க முடியாத உண்மை. உதாரணமாக, NDTV மாலை நான்கு மணிக்கு சிதம்பரம் தோற்றுவிட்டார் என்று தெரிவித்தது. இரவு சிதம்பரம் வெற்றி பெற்றிருந்தார். இதே தான் டி.ஆர்.பாலு நிலையும். எப்படி என்று புரியவில்லை. தே.மு.தி.க ஒரு முக்கிய கட்சியாக வளர்கிறது என்பதற்கு இந்த தேர்தல் ஒரு அடையாளம். பா.ம.க போட்டியிட்ட ஏழு இடங்களிலும் தோல்வி. இலங்கை தமிழரை பற்றி "mainland" தமிழர்கள் பெரிசாக அலட்டிக்கொள்ளவில்லை என்பது இந்த தேர்தல் மீண்டும் ஊர்ஜிதமாகிறது.

மத்தியில் முக்கிய துறை எல்லாம் இந்த முறை தமிழகத்திற்கு கிடைக்குமா என்பது சந்தேகம். கலைஞர் திங்களன்று சோனியாவையும் மன்மோகன் சிங்கையும் சந்திக்கிறார். அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு பதவிகள் கேட்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலின் மூலம் ராகுல் காந்தி பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளார். இடதுசாரிகள் கொல்கத்தாவில் 32 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய தோல்வியை சந்தித்துள்ளனர். இவர்களை நம்பி மத்தியில் ஆட்சி அமையாது என்பது ஆறுதலளிக்கிறது.

காங்கிரஸ் மீது கடந்த ஐந்து ஆண்டுகளில் தீவிரவாதம் கொஞ்சம் தலைதூக்கியது என்பதை தவிர பெரிதாக குற்றம் சொல்ல எதுவும் இல்லை. ஆனால், தீவிரவாதம் ஒரு பிரச்சனையே இல்லை. நீ சொல்வது போல் மும்பையில் ஆயிரம் பேர் செத்தால் தமிழன் கவலைப்பட போவதில்லை. அதே போல் அசாமில் ஆயிரம் பேர் செத்தால் மும்பை ஸ்தம்பிக்காது.
நல்ல படித்த பிரதமர், ராகுல், பிரியங்கா போன்ற இளங்கன்றுகள் என்று காங்கிரஸ் தன்னை நன்றாகவே project செய்தது. குறிப்பாக ராகுல் காந்தியின் பிரச்சாரம், உத்தர பிரதேசம் போன்ற இடங்களில் பெரிய அளவுக்கு உதவியது. ராகுல் இந்த முறை நிச்சயம் காபினெட் அமைச்சராவார்.

இந்த இமாலய வெற்றியை காங்கிரசும் எதிர்பார்க்கவில்லை. அதே போல், இப்படி ஒரு தோல்வியை சந்திக்க வேண்டி வரும் என்று பா.ஜ.க எண்ணவில்லை.ஆந்திர முடிவுகள் கொஞ்சம் அதிர்ச்சி தான். தெலுங்கு தேசம் நாலு தொகுதிகளை வென்றுள்ளது. பிரஜா ராஜ்யம் என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆக மொத்தத்தில், மக்கள் எதை கணக்கில்கொண்டு வாக்களிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

1 comment:

Saran said...

Hi Vasu,

Neenga sonna mathiri. pana balam thalai oongi irunthathu endru than solla veandum. ovvoru thoguthikalilum angae irupavarkalin sakthi ku earpa vettuku oru amount koduthu irukarkal.