Saturday 23 May 2009

Katbadhar ஒரு அளகான தெலுங்கு tupping...

நான் பல ஆண்டுகளாக தமிழ் பத்திரிக்கைகள் படிக்கிறேன் ஆனால் எனக்கு தெரிந்து யாரும் தமிழ் மொழியின் பலவீனம் மற்றும் demerits பற்றியோ அதை களைவதை பற்றியோ பேசியதே இல்லை , பெரியார் மட்டும் கொஞ்சம் பேசி ஐ என்ற எழுத்தை அய்யாவில் வருவதை போல் மாற்றி அமைத்தார்.

நான் கண்ட வரையில் தமிழில் படித்தால் பல சொற்களின் உண்மையான உச்சரிப்பு தெரிவதில்லை, அதில் முக்கியமான வார்த்தைகள்

ka மற்றும் கச
sa மற்றும் jha
ta மற்றும் da

உதாரணமாக godfather என்ற இங்கிலீஷ் வார்த்தையை தமிழில் எழுதினால் காட்பாதர் என்று இருக்கும் இதை படிக்கும்போது

Godfather , gadpadhar, katpathar,katfathar,kattupaadhar (ஏதோ சித்தர் பெயர் போல...) என்று பலவாறு படிக்க முடியும்.

இதே கதைதான் ta மற்றும் da எழுத்துக்களுக்கும்,

Darwin theory என்பதை தமிழில் எழுதினால் டார்வின் தியரி என்று வரும். இதனை tarwin deory, tarwin theory,darwin theory அல்லது darwin dheory என்று படிக்கலாம். Dubbing படங்களை tupping படங்கள் என்று சொல்வோர்தான் அதிகம்.

ஏற்கனவே இருக்கும் இந்த குறைகள் போதாதென்று தனித்தமிழ் என்று ஒரு வாதம், இருக்கும் மொழியை பலப்படுத்துவதை விட சாகடிப்பதென்று முடிவு செய்த சொத்தை வாதம். இந்த தனித்தமிழில் ஜா , மற்றும் சா போன்ற எழுத்துக்களுக்கு வித்தியாசம் கிடையாது ,

ஷா என்றே எழுத்தே கிடையாது , ஹா என்ற எழுத்தும் கிடையாது. வடமொழி வேண்டாம் என்றால் தமிழிலேயே அதற்குண்டான எழுத்துக்களை கொண்டு பேச எழுத முடியவேண்டும் இல்லையென்றால் இருப்பதில் உள்ள வசதிகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் கவர்னராக இருந்தவர் k.k.shaa அவர் தி.மு.க அபிமானி கூட, அப்போது இந்த தனித்தமிழ் உச்சத்தில் இருந்த நேரம், அதை கிண்டல் செய்து சோ தனது துக்ளக் பத்திரிக்கையில் இப்படி கார்டூன் போட்டு இருப்பார், (அதாவது தி.மு.க கவர்னரை வரவேற்பதற்கு வைத்திருக்கும் வாசகத்தை)

கே.கே.சாவே வருக

இது போன்ற அபத்தங்கள் இருந்தாலும் தனித்தமிழை வைத்திருப்போம் என்று சொல்லுவோரை என்ன செய்வது?

இன்று உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் மொழிகள் ஐரோப்பிய மொழிகள் , chinease மற்றும் Japanese. இந்த மொழிகளில்தான் புதிய தத்துவங்கள், கண்டுபிடிப்புகள் வருகின்றன, எனவே தமிழை இந்த மொழிகளுடன் ஒப்பிட்டு நம்மை பலப்படுத்திக்கொள்ள வேண்டும்,அதை விட்டு மேலும் மேலும் குண்டு சட்டியில் குதிரை ஊட்டினால் யாருக்கு லாபம்? அவ்வாறு பலப்படுத்திக்கொள்ள தமிழர்கள் என்ன செய்தனர்?

தமிழ் தமிழ் என்று சொல்லும் அரசாங்கம் என்ன செய்தது?

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது பேப்பரில் எந்த புதிய சொல் என்றாலும் (பழைய சொற்களுக்கும்) அதற்கான உச்சரிப்பை ஆங்கிலத்தில் (தனியாக) எழுத வேண்டும். ஆங்கிலம் தெரியாதவர் கூட பக்கத்தில் இருப்பவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இது தவிர இன்னொரு விஷயம், மேற்கண்ட வார்த்தைகள் அல்லாமல் தமிழில் வேறு சில உபாதைகள் இருக்கின்றன,

ந,ன,ண போன்ற இரண்டு சுழி மூன்று சுழி எழுத்துக்கள், ல,ள போன்ற எழுத்துக்கள் , முக்கியமாக ழ,ங் போன்ற எழுத்துக்கள், ர,ற போன்ற எழுத்துக்கள் , இவை வீர மறத்தமிழரிடமே தங்கள் வேலையை காட்டும், தமிழ்கூறும் நல்லுலகில் ழ என்ற எழுத்தை ல என்று உச்ச்சரிப்பவரே பெரும்பான்மை. உழவு வேலையை உலவு வேலை என்று கூறுவதில் ஆரம்பித்து அழகை அளகு என்று கூறுவதை வரை பல கொலைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆக ta-da,pa-ba,ka-gha என தேவையான வேறுபாடுகள் இல்லை ஆனால் தேவையில்லாத வேறுபாடுகளான , தமிழராலே உச்சரிக்க முடியாமல் போன வார்த்தை வேறுபாடுகள் இருக்கின்றன.

தேவையா ஆணி எது தவையில்லாத ஆணி எது என்று கேள்வி கேக்காதிங்க.அது
சற்று ஆராய்ந்தால் நமக்கே தெரியும்.

3 comments:

Vasu. said...

Gokul,

Adhellam Sari, intha pathivil yen unn tamizh ippadi irukkirathu?

Gokul said...

அதான் ப்ராப்ளம் , இந்த தமிழ் எழுதுவதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நிறைய mistake வருது ..

கோவி.கண்ணன் said...

உங்களைப் போன்றோர் கருத்துக்கு மாற்றுக் கருத்தாக எழுதியது,

http://govikannan.blogspot.com/2007/01/blog-post_17.html

http://govikannan.blogspot.com/2009/04/blog-post_1518.html