
படத்துல இருக்கறது தென் கொரியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி. இவர் கடந்த சனிக்கிழமை தற்கொலை பண்ணிக்கிட்டார். எதுக்கு தெரியுமா? கேவலம் லஞ்ச ஊழல் வழக்குல சிக்கினதுக்காக. அவர் பேரு ரோ மூ ஹ்யுன்(Roh Moo Hyun). இத்தனைக்கும் அவர் குற்றவாளின்னு இன்னும் கோர்ட் முடிவு செய்யல. இருந்தாலும், நான் தப்பு செஞ்சது உண்மை தான் அப்படின்னு சொல்லி ஜனங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு சொந்த ஊருக்கு போய் மலை மேலேந்து குதிச்சி தற்கொலை பண்ணிக்கிட்டார்.
சரி, எதோ Spectrum மாதிரி ஒரு 60,000 கோடி இல்ல மாட்டு தீவன ஊழல் மாதிரி ஒரு 1000 கோடி இல்ல வளர்ப்பு மகன் திருமணம் போல ஒரு ஊழல் இதெல்லாம் செஞ்சா தற்கொலை செஞ்சிக்கிறது நியாயம். இந்த பச்சைப்புள்ள பாவம் ஒரு 300 கோடி ஆட்டைய போட்டு இருக்கும் போல? அதுக்குள்ள சோலிய முடிச்சுட்டானுங்க.
தற்கொலைக்கு அப்படின்னு ஒரு மரியாதை இருக்கு இல்ல? இப்போ எங்க ஊர்ல இலங்கை தமிழருக்காக என் உயிரை இழப்பேன் அப்படின்னு கலைஞர் எவ்வளவு தடவை சொல்றாரு. செஞ்சாரா? ஆனா, ஜனங்க எப்படி ஓட்டுப்போட்டு 25 எம்.பி சீட் கொடுத்தாங்க. அது ராஜதந்திரம். என்ன இது சின்னப்புள்ள மாதிரி தற்கொலை அது இதுன்னு? மக்களை நம்பணும் அய்யா. ஓவரா பிரச்சனை ஆகும்னு தோணிச்சு அப்படின்னா, "ஐயோ கொல்றாங்களே" அப்படின்னு அலறணும். அங்கங்க ரெண்டு பேர தீக்குளிக்க வெக்கணும். இதெல்லாம் தெரியாதவன் என்னய்யா அரசியல்வாதி?
இவனுங்க மாதிரி ஆளையெல்லாம் வெச்சு என்ன அரசியல் நடத்துறானுங்க தென் கொரியால?
2 comments:
ஆமாமா. நம்ம ஆளுங்கக் கிட்ட இவங்கல்லாம் கத்துக்கவேண்டியது நிறைய இருக்கு.
Nice one....
Post a Comment