Friday 26 June 2009

ஞானிக்கு குட்டு


சில வாரங்களுக்கு முன்பு தனது ஒ பக்கங்களில் ஞானி கமல்ஹாசனுக்கு ஒரு குட்டு வைத்திருந்தார் , அதாவது "ஆங்கிலம் தெரிந்தவருக்கு மட்டுமே திரைக்கதை பயிற்சி வகுப்பு எடுத்ததற்காக" அந்த குட்டு.

முதலில் ஒரு வகுப்பை ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ எடுப்பது , அந்த ஆசிரியரின் உரிமை.அதற்காக ஆங்கில ஆசிரியர்களுக்கோ அல்லது English medium நடத்தும் பள்ளிகளுக்கோ குட்டு வைக்க முடியாது.

இரண்டாவதாக , அந்த பயிற்சி வகுப்பை நடத்த வந்தவர்கள் யாரென பார்த்தால்...

அஞ்சும் ராஜ்பாலி
அதுல் திவாரி
கே.ஹரிஹரன்

இவர்கள் புனே திரைப்பட கல்லூரியில் (film institute), National School of Drama போன்ற இடங்களில் ஆசிரியர்களாக இருப்பவர்.

இவர்கள் அனைவரும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள், இவர்களுக்கு தமிழ் தெரியாது. இவர்களை ஏன் அழைக்க வேண்டும், தமிழ் தெரிந்த தமிழ்நாட்டை சேர்ந்த திரைக்கதை ஆசிரியர்கள் யாரையாவது அழைத்து இந்த workshop-ஐ நடத்தலாம் என்று கேட்கலாம், அது அதை நடத்துபவர் தீர்மானிக்க வேண்டியது, ஒரு மருத்துவ துறை மாநாட்டையோ, அல்லது கட்டிடக்கலை மாநாட்டையோ யாரும் தமிழில் ஏன் நடத்தவில்லை என்று கேட்க மாட்டர்கள், திரைப்படத்தை ஒரு தொழிலாக பார்க்க தவறியதால் தரும் குட்டு இது. இதை மாற்றத்தான் கமல் முயற்சிக்கிறார் , இதிலும் ஒரு தொழில் திறமை இருக்கிறது, தொழில் முறை இருக்கிறது என்று கூற முயற்சிக்கிறார்.

மேலும் , வெளி மாநிலங்களில் திறமையே இல்லை, அங்கே இருந்து கற்க எதுவுமே இல்லை என நம்மை நாமே ஏமாற்றி கொண்டால், தமிழில் இருந்தே ஆட்களை கூப்பிடலாம்.அதைத்தான் ஞானி விரும்புகிறாரா?

வேண்டுமானால் இந்த திரைக்கதை பயிற்சி வகுப்பை தமிழிலும் எடுக்கலாம் என்று கமலுக்கு யோசனை கூறலாம் அவ்வளவுதான்.

தமிழ் சமுதாயத்திற்கு ஞானி அவர்கள் செய்து வரும் சேவை மகத்தானது , ஆனால் யானைக்கும் அடி சறுக்குமல்லவா?

1 comment:

Vasu. said...

Good one. Moreover IIT has a mix of talent from across the country. Won't be ideal to do the workshop in Tamil.