Monday 10 May 2010

ஜெய்ராம் ரமேஷ்

சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று சீனாவில் உளறியதை படித்த போதே நினைத்தேன் இவர் இன்னொரு சசி தரூர் ஆகப் போகிறார் என்று. "இந்திய உள்துறையின் அதீத பாதுகாப்பு உணர்வு மற்றும் பயம் காரணமாகவே சீன நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதில்லை" என்றார். மேலும், எல்லை பாதுகாப்பின் பொருட்டு Huawei நிறுவனத்தின் ஏற்றுமதிகளை இந்திய அரசு தடுத்தது என்று வேறு ஏதோ கூறியிருந்தார். சீன அமைச்சர் ஒருவர் பேசியது போல் இருந்தது ஜெய்ராம் ரமேஷின் பேச்சு.

மனிதருக்கு ஏழரை சனி. இன்று பிரதமர் அவரை உள்துறை அமைச்சர் சிதம்பரத்துடன் தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார். அவர் பேசியதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறது காங்கிரஸ் கட்சி. போதாக்குறைக்கு பா.ஜ.க அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோஷமிட ஆரம்பித்திருக்கிறது. எங்கு போய் முடிகிறது என்று பார்ப்போம்.

No comments: