Sunday 26 December 2010

Cupid's Arrow - Insipid Show

பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் வகையில் மற்றுமொரு கமல் காமெடி. ஆனால், முன் சொன்ன படங்களின் அளவுக்கு நகைச்சுவையை எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். தனக்கு கதையெழுத வரும், பாட வரும் என்று இனி யாருக்கு நிரூபிக்க நினைக்கிறார் கமல் என்று தெரியவில்லை. நல்ல வேளை, நடிப்பிலும் அதை செய்யாமல் மற்றவர்களுக்கு கொஞ்சம் வாய்ப்பளித்திருக்கிறார்.

கே.எஸ். ரவிக்குமார் சார், இந்த படத்துல நீங்க என்ன பண்றீங்க? நீங்க கமல் கூட கொஞ்ச நாள் சேராமல் இருப்பது உங்களுக்கு நல்லது. "You are losing your individuality". வழக்கம் போல் ரமேஷ் அர்விந்த், ஊர்வசி என்று கமல் லாயத்தை சேர்ந்தவர்கள். கொச்சின் ஹனீபா செய்திருக்க வேண்டிய பாத்திரத்திற்கு மலையாளத்தில் இருந்து மோகன்தாஸ் என்ற நடிகர். மாதவன், த்ரிஷா நடிப்பு பரவாயில்லை. சங்கீதாவிற்கு இது ஜுஜுபி ரோல்.

கௌதம் பாணியில் படம் முழுதும் ஆங்கில வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்(பதிவின் தலைப்பிற்கான காரணம் புரிந்ததா?). வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் படங்களின் பி மற்றும் சி வெற்றிகள் கமலுக்கு நம்பிக்கை அளித்திருக்க வேண்டும். இந்த நிலை வருங்கால கமல் படங்களில் தொடரலாம். நீல வானம் பாடலை பார்க்கையில் "பார்த்த முதல் நாளே" பாடல் நினைவுக்கு வராவிட்டால் நீங்கள் ஆசிர்வதிக்கபட்டவர்.

இசை, பாடல்கள் சுமார் ரகம். தமிழ் இனி மெல்லச் சாகும், அறம் செய்ய விரும்பு போன்ற standard கமல் வசனங்கள். matrimony, alimony என்று "கிரேசி" ஸ்டைல் காமெடி.

மொத்தத்தில் கமல் சார், "We need a break".

2 comments:

ramu said...

Kamal must start acting in movies instead of just appearing in them. I haven't seen this movie yet, but have a feeling as though it lacks the "Kamal element" what his fans really expect out of him. Madras tamizh and timing comedies are his masterpiece but too much of anything will be boring.
Also Kamal singing for Devi Shri Prasad's music may be a compliment to the music director, but definitely not for Kamal. As koundamani says in Naattamai movie "DSP madiri ottai boat lam Kamal madiri kadalukkulla vara vida koodadhu"

A Blip said...

So true vasu...
Kamal nalla comedy padangala koduthavar..Indha padam miga periya disappointment..Mosamana kadhaikalathu ivalo selavu...Ivalo mokkayana padatha naan pathathey ila..!