Monday 4 May 2009

காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும்-2

மூன்றாம் அணியில் யார் யார் இருப்பது...

அண்ணா தி.மு.க,தெலுகு தேசம்,சி.பி.எம்,பகுஜன் சமாஜ், தெலிங்கானா ராஷ்ட்ர சமிதி,தேவே கவுடாவின் ஜனதா தளம் ,பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் சில கட்சிகள்.

இதில் மாயாவதியும் ஜெயலலிதாவும் மட்டுமே அதிக இடங்களை வெல்லக்கூடிய சாத்தியங்களை வைத்துக்கொண்டு இருக்கின்றனர் .

இப்போதுள்ள நிலையில் இந்த கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு ஏன் என்றால் போதுமான இடங்கள் வந்தாலும் இந்த கூட்டணியின் ஒற்றுமை குறித்து நாம் யோசிக்க வேண்டும், முக்கியமாக "ஜெயலலிதா X மாயாவதி " இதற்கிடையில் தேவே கௌடா....எனவே அப்படியே ஆட்சி அமைத்தாலும் அதற்கான ஆயுள் மிகவும் குறைவு.


தேவே கௌடா
ஆதரவில் ஆட்சி அமைக்கும்படி இருந்தால் என்ன என்ன செய்வார் என்பதை சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் செய்து காட்டினார்.

ஜெயலலிதா ஆதரவில் ஆட்சி அமைத்தால் அவர் என்ன என்ன செய்வார் என்பதை 1998 பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது செய்து காட்டினார்.

நாம் பத்து வருடங்களுக்கு முன்னாள் தேவே கௌடா பிரதம மந்திரி பதவிக்கு வந்த போது எவ்வளவு நிலையான ஆட்சி அமைந்தது என்றும் பார்த்தோம்.

வரப்போகும் நம்பர் கேமில் சி.பி.எம் மற்றும் சி.பி.எம்-(ம) போன்றோர் காங்கிரசை ஆதரிப்பதற்கு சாத்தியம் இருக்கின்றன என்பதை அவர்கள் இப்போதே சொல்லி இருக்கின்றார்கள்.மீண்டும் ஒரு குதிரை பேரத்தில் காங்கிரஸ் அல்லது பி.ஜே.பி ஆட்சி அமைக்க சாத்தியங்கள் பிரகாசமாக இருக்கின்றன.

எனவே மூன்றாம் அணியை பொறுத்தவரை ஆட்சியே அமைந்தாலும் அதற்கான ஆயுள் மிகவும் குறைவாகதான் இருக்கும்.

அடுத்து இருப்பது காங்கிரஸ் கூட்டணி....

-தொடரும்...

No comments: