Monday 16 January 2012

பரமபத சோபன படம்





குழந்தைகள் விளையாடுவதற்காக என் தந்தை பரமபத சோபன படமும் பித்தளையில் தாயக் கட்டையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். நேற்று மதியம் வெகு நேரம் நானும் என் மகளும் விளையாடிய போதும் வெற்றி பெறவில்லை. என் மகள் அருகஷனிடம் (பரமபதத்தின் பெரிய பாம்பு) இரண்டு முறை மாட்டிக்கொண்டு கீழே இறங்கியதால் விளையாட்டே வேண்டாம் என்று சென்றுவிட்டாள்.

சரி பரமபதம் பற்றி விக்கிபீடியா என்ன சொல்கிறது என்று பார்க்கலாம் என்று வலையை துழாவினேன். "இவ் விளையாட்டு பண்டைய இந்தியாவில் கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் விளையாடப்பட்டது. 1892 அளவில் இங்கிலாந்தில் அறிமுகமானது. இவ்விளையாட்டு நல்வினைகளதும் தீவினைகளதும் பெறுபேறுகளைக் குழந்தைகளுக்கு விளக்குவதாக அறிமுகஞ் செய்யப்பட்டிருக்கலாம்." என்கிறது விக்கி.

சிறு வயதில் வைகுண்ட ஏகாதசி இரவன்று பரமபதம் விளையாடி இருக்கிறேன் ஆனால் அதிலுள்ள படங்கள் பற்றி எதுவும் தெரியாது. ஒரு கட்டத்திற்கும் ஒரு படம் உள்ளது. அது எதை குறிக்கிறது என்று தெரியவில்லை. அந்த பெரிய பாம்பின் பெயர் அருகஷன் என்று தெரியும் ஆனால் ஏன் அந்தப் பெயர் என்று தெரியவில்லை. பரமபதம் விளையாட்டு பற்றிய விபரமுள்ளவர்கள் தெரிவிக்கவும்.

No comments: