Thursday 17 September 2009

இது என்ன நியாயம்?

கடந்த ஆண்டு அண்ணாதுரை பிறந்தநாள் என்று சொல்லி 1400 கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்தது. அது சரியல்ல என்று ஒரு பொது நல வழக்கு ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமியால் போடப்பட்டது. அதுவே இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் முடியாத நிலையில்,கடந்த செவ்வாய் அன்று கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பத்து அல் உம்மா தீவிரவாதிகளை அரசு "அண்ணாதுரை நூற்றாண்டு விழா" என்று மீண்டும் விடுதலை செய்துள்ளது.

கோயம்பத்தூர் குண்டு வெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். அங்கு வரவிருந்த பா.ஜ.க தலைவர் அத்வானியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது. இந்த பத்து தீவிரவாதிகளும் அதில் தொடர்புடையவர்கள். இவர்களுக்கு உச்ச பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்காமல் இரட்டை ஆயுள் தண்டனை அளித்ததே பெரிய கருணை. இப்போது அதிலும் நாலு வருடம் தள்ளுபடி.

சென்ற முறை எந்த காரணமும் சொல்லாமல் 1400 கைதிகளை விடுவித்ததால் கொஞ்சம் சத்தம் எழுந்தது. இந்த முறை பிரச்சனை எதுவும் வர கூடாது என்று பத்து வருடம் சிறை தண்டனை முடித்தவர்களுக்கு மட்டும் விடுதலை என்கிறது அரசு. அது என்ன அல் உம்மா கைதிகள் மட்டும் தான் சிறையில் பத்து வருடம் முடித்தவர்களா? இன்னும் எத்தனையோ பேர் இருப்பார்கள்.முதல்வருக்கு இதில் கூட மைனாரிட்டி மக்களை திருப்திப்படுத்துவதில் ஒரு சந்தோஷம்.இன்னொரு பொது நல வழக்கு போடப்படும்.அதுவும் நீதிமன்றத்தில் இருக்கும்.அதற்குள் அடுத்த வருட அண்ணாதுரை பிறந்தநாள் வந்துவிடும்.மீண்டும் கைதிகள் விடுதலை.நானும் அதை வலையில் பதிவு செய்வேன்.நீங்களும் படிப்பீர்கள்.

3 comments:

ramu said...

Vasu,

Recession has not even spared the prisons. More lay-offs happening there too.

I think criminals will now wait till a few weeks before Anna's birthday to commit any crime, so that they need not even stay in the prison for more than a month.

Who knows, a new rule may also be introduced which will declare all murder and criminal activities performed on Anna's birthday is legal and no case will be registered :)

Vasu. said...

Well said Ram. Good one.

Zahoor said...

சிக்கன் 65 வேறு கிடைக்கிறதாம் சிறைகளில்.... என்னமோ போங்க...